பாட மறந்த குயில்

தினமும் உதய கீதம் பாடும் சோலைக்குயில்
இன்று கூவ மறக்க , அங்குவந்த சேவல்
கேட்டதாம் 'குயிலாக்க இன்று நீ கூவ
மறந்ததேன் என்று".... அதற்கு குயில்
சொன்னதாம்' காணாமல் போன என்துணைவன்
நேற்றிரவு வீடு திரும்பினான்' சேவல் தம்பி
அவனோடு சேர்ந்தே என்னை அறியாது
தூங்கிவிட்டேன்' என்றதாம் குயில்
பறவை நம்மையும் பற்றிக்கொண்டதா
இந்த காதல் .... என்று அலட்டிக்கொண்டது சேவல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (31-Oct-20, 6:59 pm)
Tanglish : paata MARANTHA kuil
பார்வை : 82

சிறந்த கவிதைகள்

மேலே