எறும்புகள் சாரை சாரையாய்

எறும்புகள் சாரை சாரையாய்

வரிசை வரிசையாய்
எறும்புகள் சென்று
கொண்டிருக்கின்றன

தலைக்கு மேல்
வெள்ளை வெள்ளையாய்
ஏதோ சுமந்து கொண்டு

அது கூட நம்மை
போலத்தானோ !
இடம் விட்டு
இடம் வந்து
பிழைப்பு நடத்தி விட்டு

புலம் பெயர்ந்து
செல்கிறதோ?

மனம் ஏனோ
நான்கைந்து மாதங்களுக்கு
முன் வட மாநில
தொழிலாளர்களை
பற்றி நினைக்கிறது

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (1-Nov-20, 7:54 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 71

மேலே