என் காதலி வர தொடங்கி விட்டாள்,

என் காதலி வர தொடங்கி விட்டாள்.......,

இப்போது அடிக்கடி கவி சிந்துகிறாள்!!

நேற்றிலிருந்து தான் வர ஆரம்பித்திருக்கிறாள்......,

இது தொடர்ந்தாலும் இன்பமே,

பகல் இரவென்று பாராமல் நானும் அவளைக் காதலிக்கிறேன்,

அவளை நான் மட்டும் எதிர்பார்க்கவில்லை

அதற்காக அவள் தவறானவள் இல்லை

இருந்தும் எனக்கு மட்டும் என்று அடம்பிடிக்க தோன்றவில்லை

அவள் எல்லா இடமும் சென்றுவர வேண்டும்

அவள் வந்தால் ஆடை களைய தோன்றுவதில்லை

ஆனந்தமாய் போர்த்தி மூடி உடுக்கவே தோன்றும்

அவளோடு கலந்திட்டால் இன்பமே அது அதிகமானால் துன்பமே......,

சில நேரம் அன்னமாக நடக்கிறாள்

சில நேரம் துப்பாக்கிச் சன்னமாக பறக்கிறாள்

என்ன செய்வது என் பச்சை பாயும் பசுமையாக வேண்டுமல்லவா!!

நீ அளவோடு வந்து போ அதிகமாய் வேண்டாம்

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாமே

நீ மட்டுமேன் அளவு மீறப்போகிறாய்

என் அன்பு #மழையே

இப்போதைக்கு நீ கட்டாயம் வேணும்

வா..........!!

இரா.பாரதி

எழுதியவர் : இ.பாரதி (6-Nov-20, 10:29 am)
சேர்த்தது : RBarathy
பார்வை : 160

மேலே