அவள் அழகை கவி வடிக்கையில்
காகிதம் புலங்காகிதம்
அடைந்தது
பெண்மையின்
மென்மை யை
எழுதுகையில்
என் பென் மை
மேன் மை அடைந்தது
உயிர் எழுத்துக்களுக்கு
உயிர் கிடைத்தது
மெய் எழுத்துக்களுக்கு
மெய் கிடைத்தது
உயிர்மெய் எழுத்து
எழுதிய எழுதுகோலுக்கு
உயிர் மெய்யாகவே
கிடைத்தது
ஒவ்வொரு வரியும்
மதிப்பு அதிகமாகி
வரி கேட்டது
தலைப்பு
அவள் தலை பூவானது
எதுகை
வியப்பில்
கவியை எழுதிய
கை எது என்றது
மோனை பன்னீர்
பூக்கள் தூவி வாழ்த்தியது
இந்த மோகனை
பேனா விற்கு பா நா
வளர்ந்தது
காகிதத்தில்
கவிதை விதையாய்
மலர்ந்தது
எழுத்து பழமாய்
இனித்தது பழுத்து