நீயும் பாரடா

வீரத்தின் உரமிட்ட நெஞ்சமடா /
வீரியம் நிறைந்த
பால் அருந்திய தமிழனடா/
விழுந்தாலும் எழுந்து விடுவானடா/
வீழ்ச்சி கண்டு முயற்சி தொலைத்திட மாட்டானடா/

உயிரைத் துச்சமென நினைப்பானடா/
உயிர் கொடுத்து
தமிழை மீட்கும் தோழனடா/ உயிர்த்தெழுந்ததுமே உரிமையைக் கேட்பானடா /
உறங்கும் வேளையிலும் விழியிலே உலாவிடும் வீரக் கனவு தானடா/

அச்சம் விதைக்காத ஈழ மண்னடா/
அழிவது தான் தமிழனுக்கே வெட்கமானதடா/
அடிமை வாழ்வை மீட்கத் துடிப்பவனடா/ அரக்கர்கள் இரத்தம் குடிப்பானடா/

எதிர்ச் சொல் உரைப்பானடா /
எதிரியை எதிர்த்து நிற்பானடா / எரிமலையாய் வெடிப்பானடா / எருமைகளின்
கோட்டையைத் தகர்ப்பானடா/

நாடு காக்கத் துடிப்பானடா/
நாட்டுக்காக மாண்ட வம்சமடா/
நாடி நரம்பெல்லாம் எழும்புதடா/
நாளும் பொழுதும் நாங்கள்
தமிழன் என்று உரக்கக் கூறும்
வேளையிலே நீயும் பாரடா //

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (18-Nov-20, 9:51 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : neeyum paarada
பார்வை : 68

மேலே