சொல்ல மறந்த காதல்
கண்ணே என சொல்லவா?
கண்மணியே என சொல்லவா?
காதலே என சொல்லவா?
எப்படி சொல்லவென எண்ணி எண்ணியே
சொல்ல மறந்தேன் காதலை
கனவிலே வந்தாய் இரசித்தபடியே
உறக்கம் கலைத்து விழி திறந்து
சொல்ல மறந்தேன் காதலை
எதிரே வந்தாய் விழிகள் மோதி
இதயம் காயப் பட்டதில்
வார்த்தைகள் மௌனம் கொண்டு
சொல்ல மறந்தேன் காதலை
ஒவ்வொரு முறையும் சொல்ல
மறந்த என் காதலை
சொல்லாமலே மறைத்தேன்
நீ நீட்டிய உந்தன் திருமண
அழைப்பிதழால்...
உன்னிடம் சொல்லாமலே
மறைந்தது என் காதல்