மணல் திருட்டு

*மணல் திருட்டு*

நிலமகளின்
சென்னீரும்
கயவர்களின்
உவர்நீரும்
மணல் மலையாய்
பொதியுந்தில்
நிரப்பி....!

மறுவீடு
காண
மகிழுந்தில்
விசும்பும்
மணமகளின்
கண்ணீராய்,
சாலைகளில்
நீர்க்கோலம்....!!

பணத்தாசை
பேய் பிடித்து
அண்டமதின்
கருவறைச்சுரண்டி
கல்லறை எழுப்ப
விழையும்
மானிடா...

கான்கிரீட்
காடுகள்
ஆக்சிஜன்
உமிழுமா?

களர் நிலமதில்
பயிரும் விளையுமா?

உனக்கு மட்டும் சோலைவனம்..
உன் சந்ததிக்கு
பாலை நிலமா?
எண்ணித் திருந்துக!
ஏற்றம் கண்டிட!!
*_வில்லியனூர் தேவ. கருணாகரன்*

எழுதியவர் : வீ ஆர் கே (20-Nov-20, 8:09 pm)
பார்வை : 45

மேலே