முறுவலிக்கும் இதழ்களில் முத்துக்கள் சிந்தக் காத்திருக்கிறேன்

முறுவலிக்கும் இதழ்களில் முத்துக்கள்
சிந்தக் காத்திருக்கிறேன்
முகம் சுளிக்கும் அழகினில்
செல்லக் கோபத்தைக் காண்கிறேன்
முழுநிலவு முகப்புத்தகத்தை
தினம் திருப்பிப் பார்க்கிறேன்
வித்தைக் கவிதையை வீனைக்காரி தந்துவிட்டால்
நித்தம் ஒருகவிதை உனக்காக எழுதுவேன் !

எழுதியவர் : கவின் சாரலன் (29-Nov-20, 9:54 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 71

மேலே