அன்றும் இன்றும்
அழகிய பூஞ்சோலையில் இயற்கை எழில் சூழ
ஆற்றங்கரையிலே சிறுவர்கள் விளையாட
பசிபோக்க பழம்முண்டு பகலெல்லாம் விளையாடி
கள்ளமில்லா சிரிப்பும் பொய் இல்லா நட்பும்
பறவைகள் போலதுள்ளிவிளையாடும்
குழந்தைப்பருவம்
சோர்வுநீங்க சோறுண்டு
களைப்பை போக்க கதைக்கேட்டு
இளைப்பாற நிலவொளியில்
கண்ணயர்ந்தோம் அன்று
இன்றோ கைபேசியில் கதைபேசி
கணிப்பொறியில் விளையாடி
உண்ணும் உணவிருந்தும் உண்ணாமல்
உண்ணும் உணவிலும் விஷமேற்றி
உறங்க இடமிருந்து உறங்காமல்
வாழ்வை தொலைத்து அலைகிறோம்
-இணையத்தமிழன்