அன்பு

கட்டாந்தரையைக்
கடித்தபடி ஊர்கிறது
கட்டெறும்பு
ஒளிதரும் ஆதவனோ
உறங்கியபடி
குழம்புச் சட்டியில்
பல்லிழுத்துக் கொண்டிருக்கும்
தென்னங்கீற்று
தூளியில் இசைக்கிறது
சிவரஞ்சனி
வெண்கொற்றக் குடை
அழகாய் வளர்ந்து
வரவேற்கிறது
அடுப்பங்கரையை
சில்லென்ற பன்னீரைத்
துளிதுளியாய்ச் சிந்துகிறாள்
கருமுகிலில் மாரி
தென்றலின் கோரத் தாண்டவத்தில்
துரிதமாய்த் தெரிகிறது
பக்கத்து வீட்டுக் கடிகாரம்
உள்ளம் மறைந்த இதயத்தில்
கொஞ்சம்கூட தெரியவில்லை
அன்பு மட்டும்.

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (5-Dec-20, 2:10 pm)
Tanglish : anbu
பார்வை : 1236

மேலே