நட்புக்காக

பள்ளிக்கூடம்

எங்கேயோ பிறந்தோம்
எங்கேயோ வளர்ந்தோம்
அன்று ஒரு நாள் பால்ய வயதில் கல்வி கற்க நுழைந்தோம் இரண்டாம் கருவறையாம் பள்ளியறையில்.....
எப்பொழுதுமே நம்மில் பேசியதில்லை பலர் அல்லது எதற்காகவாவது பேசியிருக்கலாம் சிலர் தன் பாலினம் தவிர்த்து நமது வகுப்பு நட்பு உறவுகளிடம்.... முப்பொழுதில் இரு பொழுதுகள் இடைவிடாமல் பேசிக் கொண்டும் இமைக்கும் சில நொடிகள் மட்டும் பேசாமலிருந்தும் நட்பை வளர்த்திருந்தோம் தன் பாலின சக தோழ தோழியரிடம்... ஆண்டுகள் பதினெட்டிற்கு பிறகு
இன்று நட்பு என்னும் உறவில்
கைகோர்த்து செல்கிறோம்.....
இந்த நட்பில் சுகமோ துக்கமோ
நமக்கு சரிசமம்...
இதில் பிரிவு என்பது இல்லை
நீயும் நானும் வாழும் வரை...

எழுதியவர் : மன்னை சுரேஷ் (17-Dec-20, 8:06 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 1347

மேலே