மருத்துவ வெண்பா – கரு வாழைப்பழம் - பாடல் 90

நேரிசை வெண்பா

தின்றா லுரிசையுறுந் தீராத பித்தமறும்
மன்றாடுந் தீபனமும் மட்டாகும் – நன்றாம்
மருவாணம் போற்கூந்தல் மங்கைக் கரசே
கருவாழை நற்பழத்தைக் காண்!

- பதார்த்த குண விளக்கம்

குணம்:

அதிக ருசியுடைய கரு வாழைப்பழத்தால் பித்தம் தணியும். தீபனம் அடங்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Dec-20, 7:38 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 72

சிறந்த கட்டுரைகள்

மேலே