மருத்துவ வெண்பா – கரு வாழைப்பழம் - பாடல் 90
நேரிசை வெண்பா
தின்றா லுரிசையுறுந் தீராத பித்தமறும்
மன்றாடுந் தீபனமும் மட்டாகும் – நன்றாம்
மருவாணம் போற்கூந்தல் மங்கைக் கரசே
கருவாழை நற்பழத்தைக் காண்!
- பதார்த்த குண விளக்கம்
குணம்:
அதிக ருசியுடைய கரு வாழைப்பழத்தால் பித்தம் தணியும். தீபனம் அடங்கும்.