மருத்துவ வெண்பா – வேர்க்கடலை - பாடல் 99

நேரிசை வெண்பா

மெத்த வினிப்பகும் மேவுரத்த மூலமறும்
பித்த வனிலம் பிறக்குங்காண் – இத்தரையில்
தீர்க்கவிந் தூறுஞ் சிறியவுடற் றான்பருக்கும்
வேர்க்கடலை தாணுண்ண வே!

- பதார்த்த குண விளக்கம்

குணம்:

வேர்க்கடலையால் ரத்த மூலம் போகும். தாது புஷ்டி, தேகப் பெருக்கம், பித்த வாயு உண்டாகும்.

உபயோகிக்கும் முறை:

இந்தக் கடலைக்காயினின்று எடுத்த வித்தை வறுத்தாவது, வேகவத்துச் சுண்டலாகச் செய்தாவது அல்லது வறுத்த வேர்க்கடலையுடன் வெல்லப்பாகு கூட்டி உருண்டையாகப் பிடித்தாவது உண்பது வழக்கம்.

இது தேகத்தைப் போஷிக்கும்; தாது விருத்தி உண்டாக்கும்; மலமிலகுவாய்ப் போகச் செய்யும். இதனின்று எடுக்கப்பட்ட எண்ணெயை நல்லெண்ணெய்க்குப் பதிலாக உபயோகிப்பதும் உண்டு. இது சில சரீரத்திற்குப் பொருந்தாமல் பித்தத்தை விருத்தி செய்யும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Jan-21, 11:21 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 120

சிறந்த கட்டுரைகள்

மேலே