காலம் நம்மை கரைசேர்க்கும்

பிறந்த பொழுது தாயின் பாசம்
நடக்கும் காலம் தந்தையின் ஊக்கம்
பள்ளியிலோ ஆசிரியரின் நேசம்
வளரும் பருவத்தில் நண்பர் களின் நட்பு
சோகத்தில் சொந்தங்களின் வார்த்தை
திருமண பந்தத்தில் மனைவியின் புரிதல்
வேலையில் முதலாளியின் கருணை
இக்கட்டான நேரத்தில் சுற்றத்தாரின் ஆதரவு
துன்பம் வரும் நேரம் பிள்ளைகளின் ஆறுதல்
இவை எல்லாம் காலத்தின் மறு உருவம்!
கவலை ஒன்றும் தேவை இல்லை
காலம் நம்மை கரை சேர்க்கும்
மரத்திற்கு மழை போல
வெயிலிற்கு நிழல் போல
பசிக்கு உணவு போல
தாகத்திற்கு நீர் போல
ஏழ்மைக்கு கோடை போல
நடையில்லா கால்களுக்கு தடி போல
காலத்தின் மறு உருவம்
நம்மையும் கரை சேர்க்கும் ஓர் நாள் !
கவலை வேண்டாம்.

எழுதியவர் : sai (15-Jan-21, 9:39 pm)
சேர்த்தது : சாய்
பார்வை : 152

மேலே