சம்யுக்தா தேவதையே

பித்தோடு பெருங்காதல் உன்மீது வந்ததடி
பெருங்குளத்து கமலமாய் உன் முகம் தெரிந்ததடி
பிறையை புதைத்ததாய் உன் புருவம் இருக்குதடி
அழகான இதழ் பிளவு ஆச்சரியத்தை தந்ததடி
ஆப்பமென உன் கன்னம் ஏக்கமாக்கி பார்க்குதடி
எழிலான கரும்முடிகள் ஆசையை தூண்டுதடி
கழுத்தினில் முகம் புதைத்து கட்டிக்கொள்ள தோணுதடி
காதின் நிறம் தங்கமென கவ்வி கடிக்க அழைக்குதடி
மார்பெழிலின் நிலையில் மனம் பதைத்து போனதடி
மரப்பாச்சி இடுப்பைப் போல் கனகச்சிதம் உன்னிடுப்பு
மாயங்களால் நிறைந்தது உன் அகன்ற ஏழில் மடியே
காலின் அழகை கண்டாலே காந்தமென இழுக்குதடி
சாரல் மழையாய் இருக்கின்ற சம்யுக்தா தேவதையே
தழுவி மகிழ்ந்து குளிர்ந்து எழுந்து முத்தமிட ஆசையடி
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (21-Jan-21, 8:03 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 114

மேலே