சொன்னால் புரியாது
தேன்கூட்டில்
கைவைத்து தேனை
எடுப்பவனுக்குதான்
அதன் வலி
என்னவென்று புரியும்...!!
தேனை சுவைப்பவனுக்கு
அது தெரியாது...
சொன்னாலும் புரியாது...!!
அதுபோல் தான் ...
வாழ்க்கையின்
இன்பம் என்னவென்று
துன்பத்தை
உணர்ந்தவனுக்கு தான்
புரியும்...
மற்றவர்களுக்கு
சொன்னாலும் புரியாது ...!!
--கோவை சுபா