ஒரு சொல்
ஒரு சொல்
____________________________________ருத்ரா
ஒரு சொல் உதிர்த்துவிடு
"காதலிக்கிறேன்"
என்று.
அப்புறம் எதன் மீதும்
எனக்கு கவலையில்லை.
எங்கிருந்தோ ஒரு விண்கல்
நம்மீது வந்து மோதப்போகிறதாமே.
முடியுமா அதனால்
இங்கு உன் காதல்
ஒலிக்கும்போது ?
நீ
ஒலிக்கும்போதே
அந்த விண்கல் அங்கேயே
தவிடு பொடி .
_________________________________