இராணுவ வீரனின் இறுதி பூக்கள்

எதிர்பார்த்த தருணம்தான்….
எதிரியின் துப்பாக்கி குண்டுகள்
என் மார்புகளை
என்றாவது துளைத்து செல்லும்
என்று!
அது இப்போது என்றுஅறியவில்லையே….
ஆம்…..
என் உடல் இவ்வுலக்கிக்கு வந்த கடமை நிறைவேறியது.
என் மற்றொரு இந்திய தாய்க்கு
நான் செய்ய வேண்டிய கடமை முடிவேறியது.
எம் மக்களுக்கு நான் ஆற்றிய பணியும் இதனால் சிறப்பேறியது.
இதற்கு மேல் என்ன வேண்டும்?
என் இதயத்திலிருந்து வரும் உதிரம் என் நாட்டை அலங்கரிக்கையில்....
என் மார்பில் பதிந்த பதக்கங்கள்,
துளைத்த குண்டினால் பெருமிதம் கொள்கிறதே!
இருப்பினும் சின்ன தயக்கம் தான்…
பெற்ற மகனை நினைத்து பெருமிதம் கொள்வதா?
இல்லையேல்,பெருந்துயரம் கொள்ளவாதா ?
என்று என்னும் எமது பெற்றோரை எண்ணுகையில்!
காதல் மனைவிக்கு கடிதம் சொல்லும் செய்தி யாதோ?
அதைகண்டு, காத்திருக்கும் மகளுக்கு அவள் கூறும் பதில்தான் ஏதோ?
என்று நினைக்கையில் !
இறுதியாக முடிவென்று கண்டேன்….
எமது சொந்தங்களை நீம் பார்த்துகொள்ளவீரே!
என்ற நம்பிக்கையுடன்...
முடிவில்லாத வரையறைக்குச் செல்கிறேன்….
வந்தே மாதரம்…… ஜெய்கிந்……..

எழுதியவர் : தியா (27-Feb-21, 8:31 am)
சேர்த்தது : DHIYA
பார்வை : 379

மேலே