பெண்கள் தினம்
பெண்கள் தினம்.......
அச்சங்கள் பெண்மையை மூடி மறைத்ததம்மா........
அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா......
நாட்டில் உள்ள பெண்கள் என்ன அடங்கும் குதிரைகளா ?
இல்லை,
ஆடவருக்கு அடிமை செய்யும் காவல் அடிமைகளா ?
வீடாலும் பெண்மை இங்கே நாடாளும் காலம் வந்தும்
இன்றும் ஊமைகள் போல் ஓயாமல் கண்ணீர் சிந்தும்
என்று ஒரு அவல நிலை பெண் ஒருத்தி பாடுகிறாள்
இந்த நிலையே அழித்து ஆணின் இச்சை பார்வையே ஒழித்து
அறம் என்னும் நரம்பு புடைத்து வரும் ஏளனம் அடித்து உடைத்து
உனக்கு என ஒரு தடத்தை பதித்து இடியே போல் இடித்து
பெண்ணே......!!!
தடைகளை உடை.........!!! புது சரித்திரம் படை........!!!
- என்றும் குட்டி சிரிப்புடன் உங்கள் வளர்ப்பிறைதாசன்