கலையை கலைக்கும் கலை

இணைக்குறள் ஆசிரியப்பா

அடர்ந்த வனம்வளர பூமி நெகிழ்ந்து
மண்ணை தளர்த்தியே விதையை
உள்வாங்கி நீரைத் தேக்கி
மக்க விடாமல் ஊட்டம் கொடுத்து
வளரச் செய்யும் வளமான கலைதான்
காட்டைப் பெருக்கும் தோட்டக் கலையே

மண்ணைக் கொத்திக் கூட்டி நீரூற்றி
புளிக்க வைத்தே குழைத்து
மரக்கட் டிலிலே இட்டு
வடிவாக்கி உலர்த்தி சூலையாய்
கட்டியே விறகால் நெருப்பிட்டு
கல்லாக் கும்கலை செங்கற் கலையே

வளந்தரும் காட்டை அழித்தே சிதைத்து
அரிய மிருகங் களையும்
அழகில் சிறந்த பட்சிக்
கூட்டங் களையுமே விரட்டியே
நகரம் கோயிலென கட்டியும்
நவீனம் என்றே கூறுவோர் மனிதரோ.

நன்செய் புன்செய் தரிசு என்றே
பலவகை நிலங்கள் இருக்க
நன்செய் மண்ணில் கல்லறுத்து
புன்செய் மண்ணையே வீடாக
மாற்றும் மனிதனின் வயிறுக்கு
உணவிட பயிர்கள் விளைவது எங்கே .
¬¬¬¬¬¬¬¬¬ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (1-Apr-21, 11:11 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 48

மேலே