நீ

அவனைப்போல் இவனைப்போல்
என்று எவன் போலவோ வாழ்கிறாய் நீ யார் ?
இவன் உயர்வு இவன் தாழ்வென்று ஒரு மனிதனை நீ ஒதுக்குகிறாய்
நீ எவ்விதத்தில் உயர்ந்தவன் ?
செய்ய நினைப்பதை செய்துமுடிப்பவன் வீரன்
எவனோ நினைப்பதை எல்லாம் செய்பவன் மூடன்
எதை செய்தாலும் கேள்வி என்ன செய்தாலும் கேள்வி
உனக்கென்னடா என்று தான் மனம் கேட்கிறது
உன்னையும் கடந்து செய்வேன் அதை!!!!!
கேள்வி கேட்காமல் எவன் சொல்வதும் செய்யாதே
கேள்வியே கேட்டாலும் வேண்டும் என்பதில் விலகாதே
கோட்பாடுகளை பின்பற்றியது போதும்
உனக்கான கோட்பாட்டை உருவாக்கு நாளும்
உரிமைகள் அதை எடுத்துக்கொள் பிடுங்க தேவை இல்லை
உணர்வுகள் அதை வெளிக்காட்ட வேண்டியதில்லை
கோபப்படுத்தும்போது சிரிக்க கற்றுக்கொள்
சிரிக்கும் போது அமைதியை கற்றுக்கொள்
விழத்துணிவுவு இல்லையேல் எழ தெம்பு இல்லை
பிடித்ததை செய்து செத்து விடு
கிடைத்ததில் வாழ
வென்றாலும் தோற்றாலும்
இறுதியிவரை நின்றாலே போதும்
உன் வரலாறை நீ எழுதாதே நிகழ்த்து
நாளைய தலைமுறை உன் புகழ் எழுதும்
வெறிக்கானவனாய் வாழாதே
உனக்கான வெற்றியை படை
உனக்கு வேண்டும் என்றால் அதன் சாத்தியங்களை எண்ணாதே
சாத்தியப்படுத்த எண்ணு அது சரித்திரமாய் மாறும்
ஆசைப்படு அடையும் தகுதியை வளர்த்துக்கொள்
ஆசைப்படாதே அது முடியாதென்று நீ நினைத்தால்
வாய்ப்புகளை பயன்படுத்து வாய்ச்சொல்லில் பயனில்லை செய்வதைத்தவிர உன் சொல் ஒன்றும் வலிமை இல்லை
கத்தி கத்தி சத்தம் எழுப்பாதே
உன் வெற்றி ஒன்று எட்டுத்திக்கும் இடியென ஒலிக்கும்
பதில் கூறி நேரம் போக்காதே வென்று அதை உன் பதிலாக்கு !!!

எழுதியவர் : அசோக் (6-Apr-21, 6:10 pm)
சேர்த்தது : அசோக்
Tanglish : nee
பார்வை : 122

மேலே