வாழ்க்கை பயணம்
உறங்கிய மனிதன்
விழித்து எழுந்தால்
அடுத்த நாளின்
வாழ்க்கை பயணம்
தொடக்கம் ...!!!
விழிக்கவில்லை என்றால்
அதுவே அவனது வாழ்வின்
இறுதி பயணம் ...!!
இன்று இருப்போர்
நாளை இல்லை என்பதை
யாரும் உணர்வதேயில்லை ..!!
காயமே இது பொய்யடா
வெறும் காற்றடைத்த பையடா
இது ஒரு சித்தரின் பாட்டு..!!
நாளும் இதனை
சொல்லிடுவோம்
மன கவலைகளை
பெருங்காயம் போல்
வாழ்க்கை கடலில்
கரைத்தது
மகிழ்ச்சியாக இருப்போம்...!!
--கோவை சுபா