நானும் எறும்பும்
பெருமாள் கோயில் சன்னிதானம்...
கற்பூர ஆரத்திக்கு காத்திருந்த போது
துளசிமாலையும் கையுமாக.....
தற்செயலாய் கொஞ்சம் கீழே நோக்க
அங்கோர் அதிசயத்தைக் கண்டேன்.....
அங்கோர் கரிய பெரிய எறும்பு ஒன்று....
தன் தலையின் மேல் ஓர் துளசி தளம்
ஏந்தி சென்று கொண்டிருக்க...
கூட்டம் இல்லா கோவிலில் இதைக் கொஞ்சம்
ஊர்ந்து நோக்க..... அவ்வெறும்பு மெல்ல மெல்ல
நின்ற இறைவன் திருக்கோலத்தின் பாதம் வந்தடைந்து
தலையில் ஏந்திவந்த துளசி தளத்தை சமர்ப்பித்தது...
நானோ ஆரத்திக்காக இன்னும் காத்திருக்க...
தன் சுய முயற்சியில் சிற்றெறும்பின் சாதனை....
என்னை வெட்கத்தில் ஆழ்த்தியது..
யாரோ தொடுத்த துளசி மாலை ஏந்தி நான்....
இறைவன் பார்வையில் எறும்பின் பக்தி
என் பக்தியைவிட மேலானதோ...????