விலகிச் செல்லும் ராமர்கள்

கணினி யுகத்தின்
ஆண்ட்ராய்டு ராமர்களே....!

சுயவரம் நடத்தும் சக்தி
எங்களுக்கில்லை
வில்லை ஒடிக்கும் சக்தி 
உங்களிடம் இல்லாதது போல..... !

எத்தனை ஆண்டுகள் சிறுமிகள் போல
காகித கப்பல் விட்டுக் களித்திருப்போம்
எங்களின் கல்யாண கனவினால்
அம்மாக்கள் விடும் கண்ணீரில்.....!

பூத்துக் கிடக்கும் எங்களை
புணரத் துடிக்கும் உங்களுக்கு
மாலையும் கழுத்துமாய்
மருமகனாய் மாற மட்டும் தயக்கம்.....!

மலர்ந்து கிடக்கும் எங்களை
மறுமணம் செய்யக்கூட ஆசை இல்லை
காசும் காமமும் கலந்து
செய்த புத்தி என்பதால்.....!

தரிசு நிலமாய் கிடக்கும் எங்களுக்கு
பாச (ன ) நீருக்கு மட்டும் பஞ்சமில்லை
முதிர் கன்னிகளான எங்களைப் பார்த்து
பெற்றோர்கள் விடும் கண்ணீரே போதும்.....!

வறண்டு கிடக்கும் பாலைவனத்தில்
வரதச்சணை ரோஜா
இல்லையென்றதும்
விலகி விலகி செல்லாதீர்கள்.... !

பணப்பயிர் செய்ய வாழ்க்கை
துணை தேடும் நீங்கள் மறக்க வேண்டாம்
நாங்கள் பாலைவன ச்சோலை தான்
இங்கேயும் குழந்தைப் பயிற் செய்யலாம்...!.😭

எழுதியவர் : மேஜர் முருகன் (23-May-21, 5:12 pm)
சேர்த்தது : Major Murugan
பார்வை : 117

மேலே