மனிதம் கொல்லும் கொரோனா

எங்கிருந்து நீ வந்தாய்?
ஏனிந்த துன்பம் தந்தாய்?
வில்லேந்தி போர் புரியும்
வித்தை அறிவோம்!
துப்பாக்கியை எதிர்த்தும்
துணிந்து நிற்போம்!
மறைந்திருந்து தாக்கி மக்களை
உறைந்து போக வைக்கிறாய்..
முதல் அலையில்
முகக்கவசம் அணிந்து
சமாதானம் பேசினோம்..
இரண்டாம் அலையில்
இரண்டு தவணை
தடுப்பூசி ஆயுதம் கண்டோம்..
உன்னை கை கழுவவே
எங்கள் கைககளை கழுவுகிறோம்..
உலகிலிருந்து உன்னைத் தனிமைப்படுத்தவே
உறவுகளிடமிருந்தும் எங்களைத்
தனிமைப்படுத்துகிறோம்..
ஏ..கொரோனா!
மனிதனை மட்டுமா நீ கொல்கிறாய்?
மனிதத்தையும் சேர்த்தல்லவா கொல்கிறாய்!
எரிமலையை தீபமாக்கும் ‌நுட்பம்
எங்கள் ஏழாம் அறிவு சாத்தியமாக்கும்!
கொஞ்சம் பொறு...

எழுதியவர் : மா.மகேந்திரன், ‌ தாரமங்கலம (3-Jun-21, 2:40 pm)
சேர்த்தது : மா மகேந்திரன்
பார்வை : 741

மேலே