காதல் கவிதை வரைந்தேன் உனக்கு4

நித்தமும் உனை மறவாமல்
சந்தித்துவிடுகிறேன்
உன் தரிசனத்தை பெற்றுவிடுகிறேன்
எப்போதாவது உனை சந்திக்க தவறிவிட்டால்
நீ தவறாமல் என் கனவில் வந்து
தரிசனம் தந்துவிடுகிறாய்....

எனை சந்திக்கும்போதெல்லாம்
உனை நீ அழுகுப்படுத்திக்கொண்டு வருகிறாய்
ஒருமுறை
எதேச்சையாக உனை
உன் வீட்டருகில் வைத்துப் பார்த்தப்போது நீ
அழகுப்படுத்திக் கொள்ளாமலேயே
அழகாய் இருந்தாய்
அந்தப் பாவாடை தாவணியிலே.
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (4-Jun-21, 9:11 am)
பார்வை : 231

மேலே