கவிதை எழுதுபவரா நீங்கள்

கவிதை எழுதுபவரா நீங்கள்


எதுகையைத தேடி எடுத்துப் பொறுத்த
எதுவுமே மேன்மைபடும் கேள்

மோனை மறப்பின் உருப்படா பாட்டுமே
சேனைவிட்ட போர்க்களந்தா னே


தரமாய் கவிதைகளைத் தாங்கிப் பிடிக்க
விரவிடு மோனையை யிடையே -- தரவும்
பரவசங் கொள்வர் தமிழர் விடுக்கத்
தரமு முரைநடையா கும்

யாப்பருங்கலக் காரிகை எதுகை மோனைகளை யாப்பு
நியமித்திருப்பது படியமைத்திட வேண்டுமென்கிறது.

அளவடியில் மூன்றாம் சீரில் கண்டிப்பாய் மோனை ஒவ்வோர்
அடியிலும் அமைத்திடல் வேண்டும்.

நெடிலடியில் .மூன்றாஞ் சீரில் கட்டாயம் மோனை தேவை. ஐந்தாம் சீரில்
கிடைப்பின் போடலாம்

அறுசீர் விருத்தத்தில் மூன்றாம் சீர் ஐந்தாம் சீர்களில் கண்டிப்பாய்
மோனைகள் அமைத்திடல் வேண்டும்..
எழு சீர் எண்சீர் விருத்தங்களில் முதல் மோனைத் தவிற முதல்பாதி
இடையிலும் மறுபாதி இடையிலும் மோனைகள் அமைக்கவேண்டும்.

பன்னிரு சீர் விருத்த மாகில் முன் சான்றோர் அமைப்பு எப்படி யுள்ளதோ
அதுபோல் அமைத்திடல் வேண்டும் என்று காரிகை நூல் சொல்லுகிறது.

சிலர் வர்கமோனை இணைமோனை நெடில் மோனை மெல்லின மோனை
இடையின மோனை எல்லாம் போடலாம் என்று காரிகை சொல்கிறது என்பார்கள்.
அவையாவும் ஒப்புக்கு சப்பாணி அசலைத்தேடிk கண்புடித்துடி எழுதுங்கள்.
எல்லோரும் படிக்கட்டும். கற்கட்டும் எழுதட்டும் என்பதே என் குறிக்கோளாகும்

பலரும். வெண்பா இன்னிசை வெண்பா கலித்துறை
கவிருத்தம் எ.ப் பலவகையிலும் எழுதுகிறார்கள். அதில்
சில பாடகளில் மூன்றாம் சீரில் மோனை அமைக்காது
தூக்கென பாவகையினையும் எழுதுவது வருத்தமளிக்கிறது.
வேண்டுமானால் யாபருங் கலக் காரிகை பக்கம் 173 இல்
படித்துப் பாருங்கள். மோனைகள் எங்கெங்கு அவசியம்
என்று சொல்கிறது என்பதைப் படித்து உறுதி செய்து
கொள்ளுங்கள். நல்ல பாட்டெழுதி அலங்காரத்தை
செய்ய மறக்காதீர்கள்.

எழுதியவர் : பழனி ராஜன் (6-Jun-21, 3:32 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 44

மேலே