ஸ்நேக ஸ்நேகிதியே

சினேக ஸ்நேகிதியே💓..
தோழி என்று தோழமையுடன் வந்தாய்👭...
தோல்வியின் போது தோள் கொடுத்தாய்🫂
அன்னையாய்இருந்தாய்
அனைத்துமாய் விளங்கினாய்😇
ஆண்டவனும் அடையாத அற்புத அன்பை எனக்கு அளித்தாய்❤️...
சினேக ஸ்நேகிதியே❣️
நட்பு என்னும் சிப்பிக்குள் எனக்கு கிடைத்த முத்தாக 💎
அன்பு என்னும் கருவறையில் இருந்த குழந்தையாக எனக்காய் தோன்றினாய்😊...
நான் பெற்ற வரமோ என்னவோ⁉️...
நீயும் உன் நட்பும் எனக்கானது ☺️...
நாட்கள் ஓடினாலும் நட்பு மாறவில்லை ....
காலங்கள் கழிந்தாலும் களைப்படையவில்லை.. தினம் தினம் உணவு....
தீர்வில்லா பகிர்வு....
தாலாட்டும் அன்பு...
தாய்மடி சுகம்...
தகப்பனின் தாக்கம்....
தன்னிகரில்லா தோழமை....
என் கண்மணியே....
வேறு எங்கு கிடைக்குமடி இத்தகைய உலகு🌍
இனி எங்கு தேடுவேன் இந்த உறவை💔
வரத்தைப் பெற்ற எனக்கு சாபமாகி போனதடி நம் பிரிவு🧍🏻‍♀️💔🧍🏼‍♀️
மறக்க முடியாத நினைவுகளை தந்த நீ... மனம் ஏற்காத ரணத்தையும் சேர்த்து அளிக்கிறாய் 😢
இது நியாயமா🧎🏻‍♀️
ஒரு நொடி சந்திப்பு....
ஒரு ஜென்மம் நினைவுகள்....
ஓராயிரம் கண்ணீர் துளிகள்...
வண்ணமான எண்ணங்களும் வாடிப் போகும் நிலைமையடி....
உயிரான உணர்வுகளும் ஓசையின்றி அழுகுமடி....
உன்னை பிரியும் அந்த நொடி....
நம் இருவர் கண்ணில் மரணமடி...
கண் கலங்க....
உயிர் கரைய....
உதிரம் உரைய...
ஒரு முறை திரும்பிப் பார்த்து கபடமாக சிரிப்பாயா⁉️....
அன்பே❤️...

எழுதியவர் : பூமிகா (7-Jun-21, 7:21 pm)
பார்வை : 411

மேலே