பிச்சைக்காரன்
நடைபாதையில்
அங்கொன்றும்
இங்கொன்றுமாய்
எல்லோரும் நடந்திருக்க
உட்கார்ந்தும் நின்றும்
பசி கொல்லும்
வயிறு பிழைக்க
கூவிக்கூவி
விற்பதும்
கொண்டுபோய்
பெறுவதும்
ஒதுங்கவும்
ஓய்வுக்கும் நேரமின்றி
ஆகாய நெருப்பு
திங்க
அன்றிரவு
உலை கொதிக்க
தன் மானத்தை விற்கிறான்
பிச்சைக்காரன்....
-வேல் முனியசாமி