காயம் கொள்ளாது

ஆயுதங்களில் மாண்பு மிக்க ஆயுதம்
அன்பு ஒன்றுதான்
அனைத்தும் வெல்லும் ஆயுதம் அது
கோடி கொடுத்தாலும்
கொட்டிக் கொடுத்தாலும்
காணுதற்கு அரிய ஆயுதம்
அன்பு ஒன்றுதான்,
அனைத்தும் அஞ்சுவதும் அதற்காம்
மெய் பொருள் மிஞ்சிடும் ஞானம்
கொள்வதும் கொடுப்பதும் அன்புதான்,
கோலோச்சும் கொற்றவன்
கொள்வதும் சொல்வதும் காப்பதும்
ஆள்வதும் அணைப்பதும்
அன்பின் புகலிடமே,
ஆசை கோபம் களவு உலகில்
துஞ்சற அழிவதும் அழிப்பதும்
முடிவதும் இதனால் ,
அன்பை வெறுப்பவன்
அவனவன் வாழ்வில் ஜடமே,
அன்பை உணர்பவன் மனிதன்
அகிலமும் அவனவன் கைக்குள் ,
அன்பு காயம் கொள்ளாது
கருணையின் வடிவில் தோன்றும்
தெய்வீக ஆயுதம் அது ,
அன்பை ஆயுதமாய் கொண்டவன்
என்றுமே வாழ்வான் .

எழுதியவர் : பாத்திமாமலர் (30-Jun-21, 12:41 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : KAAYAM kollaathu
பார்வை : 466

மேலே