திங்களாய் நீ

கொட்டும் அருவியில்
நீராடும் இளஞ்சூரியன்

சலசலத்து வெள்ளி
ஓடைகள் சேதி சொல்ல
கண்விழிக்கும் காலை

காண விரைந்தோடும்
பறவைகள் பட்டாம்பூச்சிகள்

குதூகலித்தது கொண்டாடும்
குயிலினங்கள் மயிலினங்கள்

விழாக்கோலம் பூணும் இயற்கை - என

என் நெஞ்சமும் மகிழுதடி
சிந்தையில் திங்களாய்
நீ உதிக்கும் வேளை!

எழுதியவர் : சகாய டர்சியூஸ் பீ (2-Jul-21, 1:52 pm)
சேர்த்தது : சகாய டர்சியூஸ் பீ
பார்வை : 220

மேலே