மீனும் மனிதனும்

கடல் நீரில்
துள்ளித்திரியும் மீன்
தனக்கு கடலில் கிடைக்கும்
உணவை விட்டு விட்டு ..!!

தூண்டிலில்
இருக்கும் புழுவுக்கு
ஆசைப்பட்டு வலையில்
சிக்கிக்கொள்ளும் ..!!

மனிதனும் அதுபோல்தான்
பேராசை பெரும் நஷ்டம்
என்பதை உணர்ந்தும்

இருப்பதை விட்டு விட்டு
பறப்பதற்கு ஆசைப்பட்டு
துன்ப கடலில்
சிக்கி தவிக்கிறான் ..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (4-Jul-21, 11:09 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 147

மேலே