குந்தாணி காதலி

வெள்ளைத்தோல் உடலா!
குண்டு குண்டு விரலா!
கூழாங்கற்கள் அழகா!
பச்சை நிற மச்சமா!
எதை கண்டு உன்னிடத்தில் மயங்கினேன்!
கடை வீதிகளில்
விசேஷ வீடுகளில்
கோவில் திருவிழாக்களில்
உணவு விடுதிகளில்
உனை தேடித்தேடி அலைந்தேன்,
ஆள் வைத்து அடித்தாய்,
ஆங்காங்கே வலிக்க
அலறி துடித்தேன்!!!
விரக்தி அடைந்த நான்
உனை துண்டு துண்டாய் வெட்ட நினைத்தேன்,
கொதி நீரை ஊற்றி
கொன்று விடலாம் என்று கூட எண்ணினேன்,
ஆதங்கம் அடங்கவில்லை,
மிளகாய் பொடி தூவி,
எண்ணையில் பொரித்து,
தயிர்ச்சோருக்கு தொட்டு சாப்பிட்டேன்!!!
உருளை கிழங்கு ருசியே ருசி!😍
$R!

எழுதியவர் : ஸ்ரீனிவாசன் (19-Jul-21, 6:00 pm)
சேர்த்தது : SRINIVASAN
பார்வை : 109

புதிய படைப்புகள்

மேலே