உண்மை காதலனின் உணர்வுப்பூர்வமான வரிகள்

#கண்ணோடு கண் பார்த்ததில்லை!
#மணிக்கணக்கில் கதை பேசி கலகலப்பாய் இருந்ததில்லை!
#கையோடு கை கோர்த்து நடந்ததில்லை!
#கடற்கரை மணலில் கால் பதித்ததில்லை!
#பிறந்த நாளன்று பரிசளித்து ஆச்சர்ய படுத்தியதில்லை!
#இருவருமாய் திரையரங்கிற்கு சென்றதில்லை!
#நெருக்கமாய் அமர்ந்ததில்லை!
#பேருந்தில் பயணித்ததில்லை!
#தொட்டு பேசியதில்லை!
#சிரித்து மகிழ்ந்ததில்லை!
#பிடித்த உணவை ரசித்து உண்டதில்லை!
#ஊர் சுற்றியதில்லை!
#வித விதமாக புகைப்படம் எடுத்து கொண்டதில்லை!அதை Facebook ல் upload செய்ததுமில்லை!
#பிறர் காதல் பார்த்து பொறாமை கொண்டதில்லை!
#செல்ல சண்டை போட்டதில்லை!
#கிள்ளி விளையாடியதில்லை!
#உப்பு மூட்டை தூக்கியதில்லை!
#உள்ளங்கையில் தாங்கியதில்லை!
#மழையில் நனைந்ததில்லை!
#மழலையை ரசித்ததில்லை!
#மடி மீது துயில் கொண்டதில்லை!
#முத்த மழை பொழிந்ததில்லை!
#கட்டி அனைத்ததில்லை!
#கொஞ்சி பழகியதில்லை!
#கெஞ்சி பேச வாய்ப்பளித்ததில்லை!
#கண்ணே கனியே என்று கவி பாடியதில்லை!
இப்படி எதுவுமே என்னிடத்தில் இல்லாத போதிலும் ஒன்று மட்டுமே நிலையாய் இருக்கிறது.
#உன்மேல் நான் கொண்ட காதல்...
தொடருவேன் (தனியே) உன்னை அல்ல, நான் உன்மேல் கொண்டுள்ள காதலை!!!
குறிப்பு:
நான் மேற்க்கோள் காட்டிய காதலனின் காதலி, "தனிமை" என்னும் பேரழகியை!!!
#A🚶one but #A🚶ive...

$®!

எழுதியவர் : ஸ்ரீனிவாசன் (19-Jul-21, 6:26 pm)
சேர்த்தது : SRINIVASAN
பார்வை : 403

மேலே