சித்திரை வல்லிக்குச் செல்வம் கல்வி

சித்திரை வல்லிக்குச் செல்வம் கல்வி!!


சித்திரத்தின் அழகனைத்தும் சேர்த்துக் குழைத்து,
செந்தமிழின் கவிச்சாற்றைக் கொஞ்சம் ஊற்றி,
சிறந்தபெரும் வைரத்தின் பொடியைக் கலக்கி,
சிந்தனையின் ஊற்றதனின் தேனைச் சேர்த்து,
சின்னதொரு வடிவத்தில் ஊற்றி வைத்து,
வண்ணத்தில் தோய்த்துஒரு கவியாய் எழுதி,
வாசித்தால் அறிவொளிரும் செல்வி சித்ரா!!

எழுதியவர் : செல்வப் ப்ரியா - சந்திர மௌ (23-Jul-21, 10:18 pm)
பார்வை : 28

மேலே