தகப்பா

என்னை ஆளாக்க
நீ போராடும்
களங்கள் தான்
எத்தனையோ...?

காயங்கள் மறைக்க
நீ போடும்
மாறுவேடம் தான்
எத்தனையோ..?

நான் கற்க
புராணங்கள்
வேண்டாம்...
உன்
புன்முறுவல்
போதும்...!

ஆயிரம் ஆயிரம்
கொடுத்து சென்ற
விமானம் கொடுக்கவில்லை,
என்
அரைக் குண்டி வலிக்க
உன்னுடன்
அமர்ந்து வந்த
சைக்கிள் பயணத்திற்க்கு...

உன் மீசை தொட்டு
அதிசயத்து நின்றவன்
நான் தான்,
என் அரும்பு மீசை கண்டு
மகிழ்ச்சியடைந்தவன்
நீ தான்...!

யார் சொன்னது,
ஒரு ஆணை
ஒரு ஆண்
காதல் கொள்வது
கூடாதென்று...

நான் கொண்டேன்
ஆணின் அமைப்பில்
ஆண்டவனை...
ராமனுக்கு 10 எனில்
உனக்கு எத்துனையோ..?

எழுதியவர் : தமிழ் வழியன் (25-Jul-21, 3:26 pm)
சேர்த்தது : தமிழ் வழியன்
பார்வை : 82

மேலே