அழகி

உன்முகம்தான்
முழுநிலவு என்றேன்
நிலவு கோபித்துக் கொண்டு
மேகத்திற்குள் மறைந்தது..

உன் கார்கூந்தல்தான்
மழைமேகம் என்றேன்!
மேகம் கோபித்துக் கொண்டு
கண்ணீர்விட்டுக்கதறியது..

உன் கண்மீன்கள்தான்
வானத்து விண்மீன்கள் என்றேன்!
விண்மீன்கள் கோபித்துக் கொண்டு
காணாமல் போய்விட்டன..

வானின் நீலமும்
கடலின் நீலமும் உன்
விழியின் நீலத்திற்கு
சம மில்லை என்றேன்!
வானம் கோபித்துக் கொண்டு
கர்ஜிக்க ஆரம்பித்தது..
கடல் கோபித்துக் கொண்டு
ஆர்ப்பரிக்க ஆரம்பித்தது..
உன்னை அழகி என்றால்
இயற்கைக்கு ஏன் இத்தனை
கோபம் வருகிறது?

எழுதியவர் : ரோகிணி (2-Aug-21, 8:10 pm)
Tanglish : azhagi
பார்வை : 233

மேலே