பச்சைத் திப்பிலி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

தாகமுடன் சோபந் தணிக்குங்காண் எவ்வகையின்
மேகமுடன் பித்தம் விலக்குமே - போகமிகும்
நவ்விய ரன்ன நயங்கொடுக்கும் பச்சையாஞ்
செவ்விய மூலச் செயல்

- பதார்த்த குண சிந்தாமணி

தாகம், சோபம், பித்தம் இவற்றை நீக்கி சுக்கிலத்தை விருத்தி செய்து அழகைக் கூட்டும் பண்பு பச்சைத் திப்பிலி வேர்க்குண்டு

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Aug-21, 7:56 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

மேலே