சுதந்திர தின வாழ்த்துக்கள்

வாழ்க பாரதம் வளர்க்க பாரதம்
சுயகவுரவம் சுயமரியாதை தனிமனித சுதந்திரம்
அடிமைத்தனம் இல்லாமல் மனிதர்கள் இயல்பாகவும்
சுகமாகவும் சுதந்திரமாகவும் சுயநலனுக்காக இல்லாமல்
பொது நலத்திற்காக நம் முன்னோர்கள் 75 ஆண்டுகளுக்கு
முன்பே சிந்தித்து சிறப்பாக செயல்பட்டு அகிம்சை முறையில்
போராடி பெற பட்டதுதான் நம் நாட்டு சுதந்திரம்.
அப்படி பெறப்பட்ட சுதந்திரம் ஆண்டுக்காண்டு படிப்படியாக
உருமாறி சுயநலக்காரர்கள் சுயநலத்திற்க்காக
சூறையாடப்பட்டு சூனியம் ஆக்கப்பட்டுள்ளது.
நம் முன்னோர்கள் உயர்ந்த எண்ணம் உருக்குலைந்து
சுதந்திரம் திசைமாறி மீண்டும் அடிமைப்பாதையில் இனம்,மதம்,சாதி,நிறம்,மொழி,உயர்ந்தவன்,தாழ்ந்தவன்,
பிரிவினை என்னும் பயணத்தில் சென்று உருக்குலைந்து
வருகிறது இப்படி தேவையற்று உருக்குலைந்து
சின்னாபின்னமாகும் நம் வருங்கால சந்ததி ஆக்கபூர்வமாக
சிந்தித்து செயல்பட்டு 75 ஆண்டுகளுக்கு முன் பெறப்பட்ட
சுதந்திரத்தை நோக்கத்தை நிலைநிறுத்தி நம் முன்னோர்கள்
எண்ணம் போல் சுதந்திரமாக பயணிக்க வேண்டும். உலகம்
போற்றும் நாடாக இந்திய உருவெடுக்க வேண்டும்.
வாழ்க பாரதம் வளர்க பாரதத்தின் புகழ்
ஓங்குக பாரதத்தின் புகழ் உலகநாடுகளில்.
அனைவருக்கு எனது சுதந்திர தின வாழ்த்துக்கள்.

எழுதியவர் : முத்துக்குமரன் P (15-Aug-21, 1:27 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 49

மேலே