சுதந்திரக்கொடி பறக்கட்டும்

இருளில் இருந்த
"சுதந்திரத்தை "
வெளிச்சத்திற்கு
கொண்டு வந்து

சுதந்திர காற்றை
சுவாசிப்பதிற்கும்
நிம்மதியான
வாழ்க்கை வாழ்வதற்கும்
பாடுபட்டு பாதை வகுத்த
தலைவர்களையும்
தியாகிகளையும்
இந்த "வைரவிழா"
சுதந்திரதின நன்னாளில்
நினைவுகூர்ந்து
வணங்குவோம் ..!!

நமது "மூவர்ணக்கொடி"
திக்கெட்டும் முரசுக்கொட்டி
பட்டொளி வீசி பறக்கட்டும் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (15-Aug-21, 5:32 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 807

மேலே