ஒரு செவ்வாய் வேண்டும்
காலையில் எழுந்து நீராடி
புத்துணர்ச்சி கொண்டு - இந்நாளில்
கோயில் சென்று முருகனை வழிபட
ஒரு செவ்வாய் வேண்டாம்.....
ஏவுகனையில் பறந்து மிதந்தபடி
விண்வெளிக்கு சென்று - இக்கோளில்
சோதனை செய்து சாதனை செய்ய
ஒரு செவ்வாய் வேண்டாம்.....
கடற்கரையில் அமர்ந்து அவள்மடி
சாய்ந்து நனையாத அவள் -இதழ்களில்
என் இதழ்களால் நனைக்கவே
ஒரு செவ்வாய் வேண்டும்.....
- கவி குழந்தை
சா. உ.சரவணன்