உயிரிகள்

உயிரை மட்டும்
ஒளித்து வைக்கிறேன்.

அவள்
சொல்ல விரும்புவது
எதுவென்றாலும்
அது என் உயிருக்கு
தெரியக்கூடாது.

புகை வழியே
அவளை பார்க்கிறேன்.
பார்க்கையில் அவள்
ஒடிந்த நிலவொளியால்
யாழ் ஒன்றை தீராது
இசைக்கிறாள்.

அவள் முத்தத்தின்
கதுப்பொன்றில்
நீந்தி களிக்கிறது
புத்தனின் தியானம்.

உயிர் ஒளிந்திருக்கும்
மந்திரச்சிமிழை
அவள் கனவில்
விதைத்து வைக்கிறேன்.

கனவு அவளோடு
கலைகிறது புகையாய்.

பூக்களின் மச்சங்கள்
தொகுத்து தன்
உயிருக்குள் கோலமிடும்
அவள் கைகளை
நனைக்கிறது என் உயிர்
கண்ணீர் விடுத்து.

எப்போதும்போல்
இப்போதும் அலைகிறேன்
மிச்ச உயிருக்குள்
அலையடிக்கும் அவள்
நினைவை உலர்த்தியபடி.

____________==================_________

எழுதியவர் : ஸ்பரிசன் (11-Sep-21, 4:38 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 66

மேலே