இறையன்பு

" இறையன்பு "

" கண்ணிலே தெறித்த
அருள் கண்டு,
தன்னிலே மரித்தது
மன இருள் மிரண்டு,

புன்னகையில் ஜொலித்த
பொருள் ஒன்று ,
அதை விளக்க தோன்றுமோ
புதிய குறள் இன்று ?

மௌனத்திலும் ஒலிக்கும்
உம் அன்பு குரல் !
புரிந்து கொண்டால் ?

தியானத்திலும்,
தெய்வ கானத்திலும்,
ஏன் ஞானத்திலும்,
அவ்வின்பம் இரல்.".

--------------

எழுதியவர் : (15-Sep-21, 2:15 pm)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 338

மேலே