கடைசிக் காதல்
கடைசிக் காதல்.
கந்தன் தேடும்
காதல்,
கவலைகள்
கரைக்கும்
காதல்.
தாயிடம் பார்க்காத
காதல்,
தாரத்திடம் கிடையாத
காதல்.
வயதோடு வரும்
காதல்,
வாழ்வு சொல்லிய
காதல்.
தனிமையில் ,
தன்னிலை மறையும்
போது,
பிறக்கும் காதல்.
"கந்தனோடு
கந்தனாக வேண்டும்
என ஏங்கும் காதல்"
இதுவே கந்தன் தேடும்
காதல்.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.