உள்ளத்தை நீ திருடிவிட்டாய்

ஓரவிழியால் பார்த்து
உள்ளத்தை நீதிருடி விட்டாய்
சாரல் தூவுது
சாயந்திரக் காற்று காதலில்
காரெழில் கூந்தல் பேரெழிலே
மாலையில் வருவதில்லை
வாரம் ஒருமுறையாவது வா
காத்திருக்கிறேன் காதலன் !

வரி அமைப்பை மாற்றி ...

ஓரவிழி யால்பார்த்து உள்ளத்தை நீதிருடி விட்டாய்
சாரல் தூவுது சாயந்திரக் காற்று காதலில்
காரெழில் கூந்தல் பேரெழிலே மாலையில் வருவதில்லை
வாரம் ஒருமுறை யாவது வாகாத்திருக் கிறேன்காதலன் !

எழுதியவர் : கவின் சாரலன் (27-Sep-21, 9:28 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 128

மேலே