தென்னகத்தின் வீரமங்கை வேலுநாச்சியார்

மோசடி இந்தியம் மறைத்த தமிழ்ப் பெண்ணரசி வீரமங்கை வேலுநாச்சியார் .

வட இந்திய ஜான்சிராணிக்கு 75 ஆண்டுகளுக்கு முன்பே வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டு
ஆங்கில ஏகாதிபத்தியத்தையும் அதன் கைக்கூலி ஆற்காடு நவாபையும் காளையார்கோவிலிலும் மானாமதுரையிலும் ஓட ஓட அடித்து விரட்டி (இந்திய அமைதிப் படையை ஈழமண்ணில் திக்குமுக்காடச் செய்து அடித்து விரட்டிய தமிழீழ விடுதலைப் புலிகள் போல்) பிறகு சிவகங்கையையும் கைப்பற்றி 1780 இழுந்த அரசாட்சியை மீண்டும் பெற்று சிவகங்கை அரசியாக முடிசூடினார்.

ஆங்கிலேயரிடம் இழந்த ஆட்சியைப் போரிட்டு மீண்டும் பெற்ற ஒரே அரச வாரிசு இராணி வேலுநாச்சியார் தான்!

ஆனாலும் தமிழச்சியாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக இந்திய தேசியக் கயவர்கள் ராணி வேலு நாச்சியாரின் புகழையும் அவரது தீரத்தையும் மதி நுட்பத்தையும் களமாடும் வேகத்தையும் மறைத்து ஜான்சி ராணியைத் தூக்கிப் பிடிக்கிறார்கள்! ( தெகுப்பு)

ஆயினும்
நம் தமிழ் வீரத்தின் அடையாளம்
தமிழ்க் குலத்தின் மாண்புறு பெருமை
வேலுநாச்சியாரை நம் சந்ததியினருக்கு உணர வைப்போம் உணர்த்துவோம்!

எழுதியவர் : இராகு.அரங்க.இரவிசந்திரன் (25-Oct-21, 12:10 am)
பார்வை : 385

மேலே