காதல் கவிதை

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
குளத்தில்
தாமரை இல்லாத குறை
நீங்கி விடுகிறது
"அவள்" குளிக்கையில்...!

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

வண்ணத்துப் பூச்சியே!
எழுந்து போ
நீ அமர்ந்திருப்பது
நீ நினைப்பது போல்
"மலரல்ல "
என்னவளின் "முகம்....!!!"

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

என்னவளே!
உன் கொழுசொலியை
நான்
கேட்காத நாட்களில்....
யாரும்
கேட்டிருக்க முடியாது
என் "சிரிப்பொலியை..."

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

பெண்ணே!
உன் உறக்கத்திற்கு
இடைஞ்சலாக
இருக்கிறது என்றால்...
என் இதயத் துடிப்பையும்
நிறுத்தி விடுவேன்..

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

பெண்ணே!
ஒருவேளை
மனமிரங்கி
எனக்கு
இறுதி அஞ்சலி
செலுத்த வரும்போது
தப்பித்தவறிக்கூட
" உன் விரல்கள்"
என் மீது
பட்டுவிடப்போகிறது....
இயற்கைக்கு மாறாக
இறந்த நாள்
"மீண்டும்
எழுந்தாலும் எழுந்து" விடுவேன்....!!!

*கவிதை ரசிகன்*

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

எழுதியவர் : கவி தை ரசிகன் (25-Oct-21, 10:31 pm)
Tanglish : kaadhal kavithai
பார்வை : 141

மேலே