அற்புதமான தத்துவம்

🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐

*என் மொழி*

படைப்பு *கவிதை ரசிகன்*

🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐

நாம் செய்யும்
பாவம்
புண்ணியத்திற்கான தண்டனை...
இறந்தபின்
கிடைக்கிறதோ இல்லையோ ஆனால்
இருக்கும் போது
நிச்சயம்
கிடைத்துவிடுகிறது
அதற்கு சாட்சி தான்
வாழ்க்கையில் வரும்
இன்பங்களும்
துன்பங்களும்.....!!!

🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵

ஒரு முறை
முயற்சி செய்தால்
அலட்சியம் செய்பவர்கள்.... ஒவ்வொருமுறையும்
முயற்சி செய்து பார்
அட !அலட்சியம் என்பார்....!

🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵

சும்மா இருந்து
துருப்படித்து
அழிவதை விட....
உழைத்துத்
தேய்ந்து அழிவது
எவ்வளவோ மேல்...!

🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵

தேவைகள்
பூர்த்தி அடையவில்லை என்று வருத்தப்படாதே
அதில்தான் வாழ்க்கையின்
சுவாரசியம் அடங்கியிருக்கிறது... தேவைகள்
முழுவதும்
பூர்த்தி அடைந்து விட்டால்
பணம் கூட
பயனற்றதாகி விடும்....!!!

*கவிதை ரசிகன்*


🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐

எழுதியவர் : கவிதை ரசிகன் (27-Oct-21, 10:17 pm)
பார்வை : 60

மேலே