ஆசிரியத் தாழிசை
#ஆசிரியத் தாழிசை பாவினம்
-------------------------------------------------------------
ஆடிடும் கடலினில் அலையது நடனம்
கூடிடும் கரையினில் கூட்டமும் மகிழும்
பாடிடத் தோன்றிடும் இயற்கை அழகே..!
பிறைமதி சூடிய பெருமான் பாதம்
நிறைவுடன் எவரும் நித்தமும் பணிய
குறையற வாழ்வும் கொள்ளல் அழகே..!
தடையது வாழ்வில் தடுக்கிய போதும்
முடையது எவையும் முறித்திட்டு பயிலும்
நடையினில் வாகை நவிலல் அழகே..!
#சொ. சாந்தி
(பைந்தமிழ் சோலை குழுமத்தாருக்கு என் நன்றிகள்)