அழகி ஒருத்தீ 27-09-2021
அழகி ஒருத்(தீ )27-09-2021
அழகியலுக்கு சாதி
மதம் இல்லையே !
கொன்றை பூவும்
நாணும் அவள் மேனியழகிலே !
சாளரம் திறந்தால் கூந்தலின்
மணம் நாசியிலே !
அவள் கொலுசின் இசைக்கு
சாலையில் கற்களும் சந்தம் பாடுதே !
சொந்தம் கொள்ள வந்வனிடம்
மஞ்சள் நதியென பாயாதே !
வானத்து நட்சத்திரம் ஒன்று
மூக்கில் துயில் கொள்ளுதே !
அமேசான் நதிபோல
வளைவு நெளிவுல்ல இடையினமே !
மங்கையென நினைத்தேனே
மனசில் தவித்தேனே !
மடந்தை இவளென
விழியம்பால் சொன்னாயா !
அரிவையில் வாகைசூடி
அறிந்திட சொல்வாயா !
நெற்றி வகுடில்
குங்கும் பதிப்பாயா !
காதல் நோய்க்கு
அதரத்தால் உரசிடுவாயா !
வம்பாய் பேசி
ஊடல் செய்வாயா !
கூடலுக்கு கணக்கில்லாது
எந்நாளும் வெல்வாயா !
பாரம்பரியம் மிகுந்தவளே
என் பரம்பரையை வளர்ப்பாயா !
அன்பாய் அருகிலே
ஆயுளுக்கும் இருப்பாயா !!!
காதல் வனத்தை பற்ற
வைத்த அழகியே நீ ஒருத்(தீ) !!!
அன்புடன்
த.பிரபு